×

தவணைக்கு பொருள் வாங்கிய தகராறு உறவினருக்கு கொலைமிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது

மயிலாடுதுறை, பிப்.17: மயிலாடுதுறை சேந்தங்குடி வெங்கடேஸ்வரா நகர் மணிவேல் மகன் சுபாஷ்சந்திரபோஸ்(33). இவர் உறவினரும் பிரபல ரவுடியுமான வெள்ளப்பள்ளம் வினோத் என்பவரது திருமணத்திற்கு மயிலாடுதுறையில் உள்ள பர்னிச்சர் நிறுவனத்தில் மாதத்தவணைக்குப் பொருட்கள் வாங்கிக்கொடுத்துள்ளார். அவர் தவணைதொகையைக் கட்டவில்லை என சுபாஷ்சந்திரபோசிடம் நிறுவனத்தினர் பணம் கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர். இவரும் பலமுறை வினோத்திடம் பணம் கேட்டுள்ளார், பணத்தை கொடுக்கவில்லை, பணம் கொடுக்காமல் ஏமாற்றியதுடன் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுபாஷ்சந்திரபோஸ் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து வெள்ளப்பள்ளம் வினோத்தைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர், சீர்காழி அருகே திருவெண்காடு காவல்நிலையத்திலும் மேலும் ஒரு வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வெள்ளப்பள்ளம் வினோத்மீது 2 கொலை வழக்கு உட்பட கொள்ளை, கொலை மிரட்டல் என 14 வழக்குகள் இவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்